Anbarivu Movie Review

அன்பறிவு :

          
    அன்பறிவு படம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி 2022ல், நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்பட்டது.

      2 மணி நேரம் 45 நிமிடங்கள் கொண்டுள்ளது.

      7.2 IMDb rating பெற்றுள்ளது.



Anbarivu  Movie Review
Anbarivu  Movie Review 


 
இயக்கம் : அஸ்வின் ராம்

ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்

நடிகர்கள் :  ஹிப்ஹாப் தமிழா   ஆதி(இரட்டைவேடம்)
                       காஷ்மீரா
                       ஷிவானி 
                       சாய்குமார்
                       விதார்த்
                       நெப்போலியன்
                       ஆஷா சரத் மற்றும் பலர்.

இசை :  ஹிப்ஹாப் தமிழா 

தயாரிப்பு நிறுவனம்:
                         சத்ய ஜோதி பிலிம்ஸ்

OTT                   :   Disney + Hotstar



கதை :

         
     மதுரையில் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் செல்வாக்கு மிக்க ஆளாக  நெப்போலியன் இருக்கிறார்.

      அவருக்கு ஒரு மகள் லட்சுமி( ஆஷா).நெப்போலியன் உடன் பணிபுரிகிற விதார்த்துக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

      அந்த நேரத்தில் நெப்போலியன் மகள் பிரகாசம் (சாய் குமார்) என்பவரை காதலித்து திருமணம் புரிய ஆசைப்படுகிறார்.

     நெப்போலியனும் அதற்கு சம்மதித்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வீட்டோட மருமகனாக வைத்துக் கொள்கிறார்.

    பிரகாசம் லட்சுமி தம்பதியினருக்கு இரட்டை மகன்கள் பிறக்கின்றனர்.

    அரசியலில் நுழைய ஆசைப்படுகிற விதார்த் பிரகாசம் நெப்போலியனுக்கு இடையில் சண்டையை மூட்டிவிட்டு பிரித்து விடுகிறார்.

     பிரகாசம் இரட்டையர்களில் ஒருவரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விடுகிறார். பிரகாசம் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றதாக விதார்த் நெப்போலியனிடம் பொய் கூறி கலவரத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

    கலவரத்தில் ஊர் இரண்டாக பிரிந்து விடுகிறது. 

      இரட்டையர்களில் அன்பு அம்மா மற்றும் தாத்தாவிடம் வளர்க்கிறார் அறிவு கனடாவில் அப்பாவிடம் வளர்க்கிறார்.  

     அன்பு மற்றும்  அறிவாக ஹிப் ஹாப் தமிழா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

      25 வருடங்களுக்குப் பிறகு அறிவுக்கு இந்த உண்மை தெரிய வருகிறது எனவே குடும்பத்தை சேர்க்க கிராமத்திற்கு சென்று ஆள்மாறாட்டம் செய்கிறார்.

     அறிவை அம்மாவும் தாத்தாவும் ஏற்றுக் கொள்கிறார்களா? அதேபோல் அன்பு தன் அப்பாவை ஏற்றுக் கொள்கிறாரா ?விதார்த்தின் சூழ்ச்சி தெரிய வருகிறதா?.இதுவே அன்பறிவு படத்தின் கதை.

         இது எம்ஜிஆர் சிவாஜி முதல் சூர்யா வரை வெளிவந்த அதே இரட்டைவேட ஆள்மாறாட்ட கதைதான். 

     கதாநாயகிகளாக இருவர், ஜல்லிக்கட்டு, சாதி வேறுபாடுகள் , தேர்த்திருவிழா என அனைத்தையும் சேர்த்து ஒரு Emotional  கதையாக  அன்பறிவு படம் வெளிவந்துள்ளது.



 கௌரியின் பார்வையில் :

        

     தமிழ் சினிமாவின் பழைய கதையாக இருந்தாலும் படக்குழுவினர் ஏதோ வித்தியாசமாக எடுக்க   முயற்சித்துள்ளனர்.

    எனினும் கதைக்கு   தேவையில்லாத  பல காட்சிகள் படத்தின் தொய்விற்கு காரணம் ஆகிறது.

      அதிக Emotional காட்சிகள் படத்தில்   இடம்பெற்றுள்ளன. Emotional  கலந்த பழைய அதே இரட்டை வேட கதை.



                                                                                                   - Gowri's View ❤️.




Post a Comment

0 Comments